புதன், 1 ஜூலை, 2026

காதல் வலி

 

காதல் வலி

 

பட்டாடை உடுத்தி கொண்டேன்

பொன்நகைகள் பூட்டிக்கொண்டேன்

தோழிமார் சூழ மேடையும் ஏறிவிட்டேன்

 

நண்பனாய் நுழைந்து

காதலாய் கலந்து விட்ட கண்ணாளா

உம்மைத்தான் கண்களால் தேடுகின்றேன்

காதலால் கரைகின்றேன்

 

மணமகளாய் நான் மேடையேற

மணமகனாய் நீர் வேண்டுமென்று

புதுசட்டை பையில் காகிதம் கண்டீரோ

ஒருதலை காதல் என்று கிழித்து போட்டீரோ

 

தூதாய் நான் கொடுத்த புத்தாடை போட்டுவந்து

துரிதமாய் எனை கொண்டள்ளி போவீர் என்று

கனவு பல கண்டுவிட்டேன்

பகல் கனவு தான் கண்டுவிட்டேன்

 

இன்னொருவர் மாலை ஏற்கும் இந்நேரம்

இனியவரே நீர் மட்டும் இல்லாமல் போனீரே

சிற்பமாய் சிரித்திருந்த என்னை காதல் வலியால்

கல்லாய் செய்தீரே

 

 சொல்லாத காதல் எல்லாம் சுமையாய்த்தான்

போகுமென்று அறிந்து கொண்டேன்

இல்லாத காதலோடு இல்லறம் நடத்தத்தான்

கழுத்தில் தாலியும் ஏற்றுக்கொண்டேன்

 

மண்டப வாசலில் யாரது நீர் தானோ!

உம் கண்ணில் கண்ணீர் துளி தானோ!

என் விதியே!என் செய்வேன்

என் விதியே என் செய்வேன்

 

என்னை வாழ்த்தி நிற்கும் தெய்வங்காள்

வரம் ஒன்று வேண்டுகின்றேன்

அவருக்கும் காதல் எனில்

அந்த காதல் காகிதம் தான்

அவர் கையில் என்றும் கிடைக்காமல் போகட்டும்

அத்தை பெத்த மயிலே

 

என் அத்தை பெத்த மயிலே

இரட்டை ஜடை ஒயிலே

ஆத்தங்கரை ஓரமாத்தான் கால்கடுக்க காத்திருக்கேன்

கூட்டாஞ்சோறு ஆக்க தான் பல சாமன் சேர்த்திருக்கேன்

நித்தமும் தவறாம நீ வந்து காத்திருப்ப

அந்த வானத்து நிலவாத்தான் புன்னகையா பூத்திருப்ப

உன் கொலுசு சத்தம் இன்னும் கேட்கலையே

உன் கூந்தல் மல்லிவாசம் இன்னும் வீசலையே

என்னாச்சோ ஏதாச்சோ நெஞ்சு பதறுதடி

வஞ்சி உன் முகம் காண மனசும் துடிக்குதடி

 

அவசரமா வந்த என் ஆத்தா  சொல்லிவச்சா

உன் அத்தை பொண்ணு இனி விளையாட வரமாட்டா

ஒன்னும் புரியாம திருத்திருன்னு நான விழிக்க

குறும்பா எனை பார்த்து கலகலன்னு அவ  சிரிக்க

உன்னை காணாம அன்னந்தண்ணி இறங்கவில்ல

உன் விரலு தொடாம கண்ணும்தான் மூடவில்ல

 

மாமா என் வாசல்வந்து மரியாதை செஞ்சி வச்சான்

உன் அண்ணங்காரன் கூட  முறுக்காம பேசி போனான்

வாயெல்லாம் பல்லாத்தான் என் அப்பனும் சிரிச்சி நின்னான்

சடங்கு செய்ய போய்வான்னு அவங்ககூட அனுப்பிவச்சான்

 

உறவு எல்லாம் கேலி பேச

பொம்பளைங்க கொளவ போட

இது என்ன சடங்கோஎனக்கும் விளஙகவில்லை

உன்னை பார்வைஅதுமட்டும் எனக்கு போதும்புள்ள

 

நீ எங்கேன்னு என் கண்ணும் காத்திருக்க

ஓலைபின்னல்நானும்கட்ட உள்ளே நீயும் பூத்திருக்க

சந்தனம் மனம் வீச உன் மைக்கண்ணும் பார்த்திடிச்சி

சிரிப்பாக நீ சிவக்க என் மீசையும் அரும்பிடுச்சி

 

ரோசாப்பூ மூக்கழகி உன்ன நானும் பார்ப்பதெப்போ

வண்ணாத்திபூச்சியா நீயும் சிறகடிச்சி வாரதெப்போ

தாவணியில் உனைபார்க்க மனசும் ஏங்குது

அரை டவுசர் போடவும் எனக்கே ரொம்ப  கூசுது

 

அடி கோவப்பழ உதட்டுக்காரி என் நெஞ்சு கிறங்குது

இது என்ன புது நெனப்பு என் உசுர வாங்குது

சேர்ந்து விளையாட உன் கைப்பட்ட நேரமது

இப்போ வந்து என் கண்ணுல தேனா இனிக்குது

 

புரியாத வயசுல அறியாம தந்த முத்தம்

தூக்கம் கெடுத்து ஏக்கம் கொடுக்கும் நித்தம்

உன்னவிட்டா வேற ஏதும் நினைவில் நிக்கவில்ல

காலமெலாம் என்க்கூட விளையாட வாடிபுள்ள