வெக்கை வேகும்
வெயிலின் தாக்கம்
தலைத் தலையாய்
உறிஞ்சிச் செல்லும்
கதிரலைகளுக்கு
ஒப்புக் கொடுத்து நிற்கும்
மரங்கள்...
மழைக்கு மட்டும் தானா
அவர்கள் தலையசைப்பு?
வாசல் வழியும்
வெள்ளைச் சூட்டில்
தத்தித்தத்தி வந்தமர்ந்தது
பட்டாம்பூச்சி...
பூவின் சூடென
நம்பியிருக்குமா
வெயிலும் குடிக்க
பழகியிருக்குமா
இறகுகள் சாமரம்
மண்ணுக்கா
சிறு உடல்
வியர்த்திருக்குமா
எண்ணம் கலைத்து
வண்ணம் தொடுத்து
பட்டென பறந்த
பட்டாம்பூச்சிக்கு
தெரிந்தே இருக்கிறது
அங்கு பச்சய நிழலொன்று
காத்திருக்கும் என்று
இரம்யாநடராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக