அனலி அணைக்க
அரூப மாயத்
தொடர்களாய்
ஆகாயவெளியில்
அலைகழியும்
மண்ணின் குளிர் துரத்த
சிகரத் தேடுதலில்
புலம் பெயரும் தூரம்
போட்டிகளின் நடுவில்
மின்னலென
சில சிலிர்ப்புகள்
கூடும்
கனத்த தேகத்தின்
அழுத்தச் சலனங்களில்
விட்டுப் பிரியும்
நொடிகளில்தான்
ஒற்றைத் தியானம்
அரங்கேறும்
விடுபட்ட பின்பு
விடுதலையே நிதர்சனம்
உள்நோக்கிக் குவிவதோ
வெளி வெடித்துச்
சிதறுதலோ
உயிர்கொண்ட வரம்
கவிதையெனக் கொண்டாடி
கையேந்தும் மடிகளில்
தாளமிடும்
மழைத்துளிகளில்
அது அது கொண்ட
நெடும் பயண
நினைவுகள்
இரம்யாநடராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக